NATIONAL

கோவிட்-19: மக்களின் அணுகுமுறையே பிகேபி காலகட்டத்தை முடிவு செய்யும் !!!

30 மார்ச் 2020, 12:19 AM
கோவிட்-19: மக்களின் அணுகுமுறையே பிகேபி காலகட்டத்தை முடிவு செய்யும் !!!

கோலா லம்பூர், மார்ச் 30:

அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி வருவோரின் விகிதம் 97%-க்கு உயர்ந்துள்ள நிலையில் அரசாங்கம் தொடர்ந்து பொது மக்கள் வீடுகளில் அமைதியாக இருக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என உறுதி கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அரசாங்கம் நாட்டு மக்கள் 100% பிகேபியை பின்பற்ற வேண்டும் என்று எதிர் பார்க்கிறது. ஆனாலும், பிகேபி காலகட்டத்தில் அதை பின்பற்றாமல் கைது செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை வரை  649 எட்டிய சூழ்நிலையில் பொது மக்கள் கோவிட்-19 நோயை பெரிதாக கருதவில்லை என்ற மனநிலையில் உள்ளனர் என்றே அர்த்தப்படும்.

மக்களே பிகேபி காலகட்டத்தை முடிவு செய்ய வேண்டும். அப்படி கோவிட்-19 நோய் பரவலின் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் இன்னும் சில பொறுப்பற்ற தரப்பினர் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் வரையில் பிகேபி நடவடிக்கை மேலும் தீவிரமடையும் என்று நாம் கருத முடியும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.