NATIONAL

கோவிட்-19, இன்றோடு 2320 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது !!!

28 மார்ச் 2020, 11:20 AM
கோவிட்-19, இன்றோடு 2320 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது !!!

புத்ராஜெயா, மார்ச் 28:

நம் நாட்டில் 159 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இன்று நண்பகல் வரை மொத்தம் 2,320 பாதிப்புகளாக உள்ளன.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, ஒரு புதிய மரணமும் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் இறப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

சமீபத்திய பாதிக்கப்பட்டு இறந்தவர் ‘நோயாளி 2,162’, 61 வயதான நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர். இவர் மார்ச் 24 அன்று தங்காக் மருத்துவமனையில் முதன்முதலில் சிகிச்சை பெற்றார்.

மார்ச் 25 ஆம் தேதி அவர் முவார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இன்று காலை 10.50 மணிக்கு இறந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.