NATIONAL

தெலுக் இந்தான் மருத்துமனை வழக்கம்போல் செயல்படுகிறது!

25 மார்ச் 2020, 11:50 PM
தெலுக் இந்தான் மருத்துமனை வழக்கம்போல் செயல்படுகிறது!

ஈப்போ, மார்ச் 26-

தெலுக் இந்தான் சுகாதாரத் துறை பணியாளர்களில் சிலருக்கு கோவிட் 10 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இந்த மருத்துவமனை வழக்கம் போது சேவைகளை வழங்கி வருகிறது என்று பேரா மாநில சுகாதார துறை இயக்குநர் டத்தோ டாக்டர் டிங் லேய் மிங் தெரிவித்தார்.

முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டவுடன் இந்த மருத்துவமனையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப் பட்டுள்ளன. எனவே பொது மக்களும் நோயாளிகளும் எவ்வித அச்சமுமின்றி இம்மருத்துவமனை சேவையை நாடலாம் என்றார் அவர். மேலும் இங்கு தூய்மைப்படுத்தும் நடவடிக்கை நாளொன்று இரு முறை மேற்கொள்ளப்படுவதோடு வெளி நோயாளிகள் அறைக்கு அருகில் இருந்த காத்திருக்கும் பகுதி அவசர சிகிச்சை பகுதியாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.

ஆயினும், தெலுக் இந்தான் மருத்துவமனை அவசர சிகிச்சை பகுதி தற்போது மஞ்சள் மற்றும் சிவப்பு பகுதிகளில் கடுமையான நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை வழங்கும் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.