NATIONAL

கோவிட் - 19 : மேலும் ஒருவர் மரணம்

25 மார்ச் 2020, 4:35 AM
கோவிட் - 19 : மேலும் ஒருவர் மரணம்

ஷா ஆலாம், மார்ச் 25-

கோவிட் - 19 தொற்று நோயால் மேலும் ஒருவர் மரணமுற்றதாக தேசிய பேரிடர் நடவடிக்கை மையத்திடம் புகார் செய்யப்பட்டது.  இதன் வழி இக்கொடிய நோயால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 17ஐ எட்டியதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

"இந்நோயால் மரணமுற்ற 17ஆவது நபர் (1,251) 66 வயதுடைய மலேசியர் ஆவார். இவருக்குப் பல கடுமையான நோய்கள் கண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

" இவருக்கு கோவிட் - 19 தொற்று நோய் கொண்டிருப்பது மார்ச் 21 ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. மூவார், சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரின் உடல் நிலை படிப்படியாக மோசமானதைத் தொடர்ந்து இன்று மார்ச் 25 ஆம் தேதி அதிகாலை மணி 4.10க்கு இவர் மரணமுற்றார்" என்றார் நோர் ஹிஷாம்.

இதனிடையே, கோவிட் - 19 தொற்று நோயால் மேலும் இருவர் மரணமுற்றதையடுத்து இவ்வெண்ணிக்கை இன்று மதியம் 19ஐ எட்டியதாக அறியப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.