NATIONAL

சிலாங்கூர் மாநில சட்டசபை திங்கட்கிழமை திட்டமிட்டபடி நடைபெறும் !!!

12 மார்ச் 2020, 10:02 AM
சிலாங்கூர் மாநில சட்டசபை திங்கட்கிழமை திட்டமிட்டபடி நடைபெறும் !!!

போர்ட் கிள்ளான், மார்ச் 12:

சிலாங்கூர் மாநில சட்டசபை கூட்டத் தொடர் திட்டமிட்டபடி மார்ச் 16-இல் நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் எதிர் நோக்கி வரும் சூழ்நிலையில் சட்ட மன்ற கூட்டம் தொடர்ந்து செயல்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சட்ட மன்ற நுழைவாயிலில் அனைவருக்கும்  சுகாதார கட்டுபாடு மற்றும் உடல் வெப்பநிலை சோதனை நடத்தப்படும் என்று அமிருடின் ஷாரி கூறினார்.

" சட்டமன்றத்தில் நுழையும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்," என்று மேற்கு துறைமுக தளவாட மையத்திற்கு வருகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.