NATIONAL

எஸ்பிஆர்எம் தலைவர் பதவியில் இருந்து விலகினார் லத்தீபா கோயா

10 மார்ச் 2020, 5:10 AM
எஸ்பிஆர்எம் தலைவர் பதவியில் இருந்து விலகினார் லத்தீபா கோயா

கோலாலம்பூர், மார்ச் 9:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தலைவர் பதவியில் இருந்து லத்தீபா கோயா விலகினார்.

தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் டான்ஸ்ரீ முகிதீன் யாசினிடம் தான் அனுப்பியதை லத்தீபா இன்று உறுதிப்படுத்தினார். அக்கடிதத்தை திங்கட்கிழமை தான் பிரதமருக்கு அனுப்பியதாகக் குறிப்பிட்ட லத்தீபா இது தான் சொந்தமாக எடுத்த முடிவாகும் என்று அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் தனக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை லத்தீபா திட்டவட்டமாக மறுத்தார். தனது அதிகாரிகள் மற்றும் பிரதமரின் முழு ஒத்துழைப்பின் கீழ் எஸ்பிஆர்எம் ஊழல் விவகாரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.