RENCANA PILIHAN

பண்டார் சவுஜானா புத்ரா மேம்பாலம் 2021 செப்டம்பரில் முற்றுபெறும்

3 மார்ச் 2020, 6:04 AM
பண்டார் சவுஜானா புத்ரா மேம்பாலம் 2021 செப்டம்பரில் முற்றுபெறும்

கோல லங்காட், மார்ச் 3-

பண்டார் சவுஜானா புத்ராவின் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் மேம்பால கட்டுமானப் பணி 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பண்டார் சவுஜானா புத்ரா வட்டச் சாலையைக் கடக்காமல் மத்திய வடக்கு தெற்கு நெடுஞ்சாலையையும் ( இலைட்) தென் கிள்ளான் நெடுஞ்சாலையையும் (எஸ்கேவிஇ) எட்டு வழிச் சாலைகள் கொண்ட 800 மீட்டர் தூரத்திலான இம்மேம்பாலம் இணைக்கும்” என்று சிலாங்கூர் பெர்மோடாலான் பெர்ஹாட் திட்டமிடல் அதிகாரி யோஸ்மான் யாக்கூப் கூறினார்.

பண்டார் சவுஜானா புத்ரா சுற்றுப் பகுதிகளை இணைக்கும் அங்குள்ள எட்டடுக்கு டோல் சாவடி சந்திப்பானது கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாத் திறக்கப்பட்டது என்றார் அவர்.

எனினும், சம்பந்தப்பட்ட மேம்பால பணிகள் போக்குவரத்திற்கும் மக்களுக்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அவற்றைப் பார்வையிட்ட பின்னர் அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.