RENCANA PILIHAN

டாருல் ஏசான் குடிநீர் திட்டம்: பதிவு நடவடிக்கை மார்ச் மாதத்திற்கு பின் மீண்டும் தொடங்கும்!

14 ஜனவரி 2020, 3:26 AM
டாருல் ஏசான் குடிநீர் திட்டம்: பதிவு நடவடிக்கை மார்ச் மாதத்திற்கு பின் மீண்டும் தொடங்கும்!

கோல லங்காட், ஜன.14-

டாருல் ஏசான் குடிநீர் திட்டத்தின் முதல் கட்டம் வரும் மார்ச் மாதத்தில் முழுமையாக நிறைவுற்றதும் அதற்கான பதிவு நடவடிக்கை மீண்டும் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடக்க கட்டம் நிறைவுற்றதும் இத்திட்டத்தில் இன்னும் பதிந்து கொள்ளாத பயனீட்டாளர்கள் பதிவு செய்யும் நடவடிக்கை ஆண்டு இறுதி வரை தொடரும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“டாருல் ஏசான் குடிநீர் திட்டத்தின் முதல் கட்ட பதிவு நடவடிக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவுற்றது. இத்திட்டத்தில் பதிந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வரும் மார்ச் மாதம் தொடங்கி குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்படும்” என்றார் அவர்.

“முன்னதாக, நான்கு மாதத்திற்கு ஒரு பதிவு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம். ஆனால், பதிவு செய்யத் தவறியவர்கள் தற்போது ஆண்டு முழுவதும் நடைபெறவிருக்கும் பதிவு நடவடிக்கை வழி பயன் பெறலாம்” என்றார்.

மாதம் ஒன்று 4,000 ரிங்கிட்டும் குறைவாக குடும்ப வருமானம் பெறுபவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.