NATIONAL

சிலாங்கூரில் புகைப்பிடிக்கும் தடையை மீறிய 64 தனிநபர்களுக்கு அபராதம்!

1 ஜனவரி 2020, 11:41 PM
சிலாங்கூரில் புகைப்பிடிக்கும் தடையை மீறிய 64 தனிநபர்களுக்கு அபராதம்!

ஷா ஆலம், ஜன.2-

தடையை மீறி உணவகங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீதான அமலாக்க நடவடிக்கையில் ஆறு வயது குறைந்தவர்கள் உட்பட 64 தனிநபர்களுக்கு சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா நேற்று அபராதம் விதித்தது. உணவுப் பொருட்கள் கடைகளில் புகைப்பிடிக்கும் தடையை மீறிய 51 தனிநபர்கள் மீது 11ஆவது விதிமுறையின் அபராதம் விதிக்கப்பட்டதாக அவ்விலாகாவின் இயக்குநர் டத்தோ டாக்டர் காலீட் இப்ராஹிம் கூறினார்.

அதேவேளையில், தங்கள் கடைகளில் புகைப்பிடிக்கத் தடை விதிக்கும் அறிவிப்புப் பலகையைப் பொருத்தாத 5 கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இதனிடையே, வாடிக்கையாளர்கள் தங்கள் சிகரெட் சாம்பலைப் போடுவதற்கான தட்டுகளை வைத்திருந்த இரு கடை உரிமையாளர்கள் மீதும் 11ஆவது விதிமுறையின் கீழ் அபராதம் விதிக்கப்பட்ட விவரத்தையும் அவர் விவரித்தார்.

குளிர் சாதனம் பொருத்தப்பட்ட உணவகத்தில் புகைப்பிடித்த வயது குறைந்த 6 தனிநபர்களுக்கும் அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.