NATIONAL

அன்வார் எங்கு இருந்தார் என்று காவல்துறை விசாரிக்கும்- ஐஜிபி

26 டிசம்பர் 2019, 2:20 AM
அன்வார் எங்கு இருந்தார் என்று காவல்துறை விசாரிக்கும்- ஐஜிபி

கோலா லம்பூர், டிசம்பர் 25:

மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் அன்வார் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறிய முகமட் யூசுப் ராவுத்தர், அந்த நேரத்தில் அன்வார் எங்கிருந்தார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முகமட் யூசுப் ராவுத்தர் தன்னுடைய சத்திய பிரமானத்தில் 2018 அக்டோபர் 2-இல், அன்வார் தனக்குப் பாலியல் தொந்திரவு கொடுத்ததாகக் குற்றஞ் சாட்டியுள்ளார். அதே நாளில் போர்ட் டிக்சன் இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்று விட்டதாக அன்வார் கூறுகின்றார் என்று மலேசிய காவல்துறை தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் கூறினார்.

கடந்த வாரம் புக்கிட் அமான், யூசுப்மீது பொய்யறியும் சோதனை ஒன்றை நடத்தியது.

பொய்யறியும் சோதனை போலீஸ் விசாரணைக்கு உதவும் என்பதால்தான் நடத்தப்பட்டதே தவிர அது ஓர் ஆதாரமாகப் பயன்படுத்தப்படாது என்று ஹமிட் கூறினார்.

அச்சோதனையின் முடிவு இன்னும் தெரியவில்லை என்றாரவர்.

இதனிடயே, அன்வார் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். அவரும் விசாரணைக்காக புக்கிட் அமான் சென்று வந்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.