NATIONAL

அரசு சாரா இயக்கங்கள் கெஅடிலான் கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம்

15 டிசம்பர் 2019, 3:01 AM
அரசு சாரா இயக்கங்கள் கெஅடிலான் கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம்

அம்பாங், டிசம்பர் 14:

மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) சச்சரவில் சம்பந்தமில்லாத அரசு சாரா இயக்கங்கள்  இரு தரப்புகளையும் உசுப்பி விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கெஅடிலான் கட்சியின்  உதவித் தலைவர் சுரைடா கமருடின் வலியுறுத்தினார்.

கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியது போல இரு தரப்பினரும் அமைதி காக்கும் நேரம் இது என்று ஜூரைடா குறிப்பிட்டார். சம்பந்தமில்லாத சில அரசு சார்பற்ற இயக்கங்கள் கட்சியின் ஒற்றுமையைக் குலைக்கும் வண்ணம் இருக்கின்றன. இவை கொசுக்கள் போன்றவை. கொசுக்கள் போன்றே அவ்வப்போது கடித்து தொந்திரவு செய்கின்றன என்று சுரைடா கூறினார்.

“ என்ன பிரச்னை என்னவென்றே தெரியாத அந்த அரசு சாரா இயக்கங்கள் அதில் சம்பந்தப்படக்கூடாது. நாட்டின் நலனை உத்தேசித்து அரைவேக்காட்டு  சீண்டிவிடும் செயலை நிறுத்துக் கொள்ள வேண்டும்”, என்று இன்று அம்பாங்கில் செய்தியாளர்களிடம் சுரைடா தெரிவித்தார்.

முன்னதாக 'ஓதாய் ரெபோர்மிஸ் 1998' சுரைடாவை வீடமைப்பு, ஊராட்சி அமைச்சிலிருந்து தூக்க வேண்டுமென்று கோரியிருந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.