RENCANA PILIHAN

மந்திரி பெசார், சிலாங்கூர் அரச உயரிய விருதை பெறுகிறார் !!!

11 டிசம்பர் 2019, 12:15 AM
மந்திரி பெசார், சிலாங்கூர் அரச உயரிய விருதை பெறுகிறார் !!!

கிள்ளான், டிசம்பர் 11:

சிலாங்கூர் மன்னர் சுல்தான் சராபூஃடின் இட்ரீஸ் ஷா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி மிக உயரிய விருது வழங்கப்படுகிறது. அவரோடு மற்ற 91 முக்கிய பிரமுகர்களும் விருது பெற இருக்கின்றனர். அமிரூடின் ஷாரி சிலாங்கூர் அரசரின் மிக உயரிய விருதான ஸ்ரீ பாடுகா மக்கோத்தா சிலாங்கூர் (எஸ்பிஎம்எஸ்) எனப்படும் டத்தோ ஸ்ரீ பட்டத்தை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்தின் இணை வேந்தர் பேராசிரியர் டத்தின் பாடுகா டாக்டர் அன்னி இட்ரீஸ் டத்தோ செத்தியா சுல்தான் சராபூஃடின் இட்ரீஸ் ஷா (எஸ்எஸ்ஐஎஸ்) எனப்படும் டத்தோ செத்தியா அல்லது டத்தின் பாடுகா விருதை பெற இருக்கிறார் என்று அரண்மனையின் அதிகாரப் பூர்வ அறிக்கை தெரிவித்திருக்கிறது. இந்த விருது வழங்கும் விழா அலாம் ஷா அரண்மனையில் நடைபெற உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.