NATIONAL

இன அரசியலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்! - அமிருடின் ஷாரி

25 நவம்பர் 2019, 12:22 AM
இன அரசியலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்! - அமிருடின் ஷாரி

பத்து கேவ்ஸ், நவ.25-

பொறுப்பற்ற தரப்பினர் வேண்டுமென்றே மேற்கொள்ளும் குறுகிய மனப்பான்மையிலான அரசியல் சதுரங்க ஆட்டத்தை சிலாங்கூர் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க மாநில அளவில் மட்டுமல்லாது கூட்டரசு நிலையில் எதிர்க்கட்சிகள் இது போன்ற சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.

“சீனர்களைச் சந்திக்கும் போது, பிரதமர் மகாதீர் ஓர் இனவாதி என்றும் சீனர்களுக்கு எதிரானவர் என்று அவர்களை மிரட்டுவர்”.

“அதன் பின்னர் மலாய்க்காரர்களைச் சந்தித்து மலாய்காரர்கள் எப்போதுமே இதர இனத்தவர்களின் சவாலை எதிர்நோக்கும் கொண்டுள்ளதாக கூறுவர்” என்றார் அவர்.

இந்த எலும்பில்லாத நாக்கின் சொற்களுக்கு சிலாங்கூர் மக்கள் செவிசாய்க்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.