NATIONAL

விவேக மாநிலம் : மலேசியாவை உலகின் பார்வைக்கு கொண்டுச் சென்றது சிலாங்கூர்

25 நவம்பர் 2019, 12:03 AM
விவேக மாநிலம் : மலேசியாவை உலகின் பார்வைக்கு கொண்டுச் சென்றது சிலாங்கூர்

பத்து கேவ்ஸ், நவ.25-

பார்சிலோனாவில் நடைபெற்ற வவேக மாநகர் எக்ஸ்போ காங்கிரஸ் மூலம் உலக அரங்கிற்கு விவேக மாநில திட்டத்தை கொண்டுச் சென்ற முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது.

2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் சரியான தடத்தில் இருப்பதை இந்நடவடிக்கை உறுதி செய்திருப்பதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

உலக நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் முதல் மாநிலமாகவும் சிலாங்கூர் திகழ்கிறது என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.

146 நாடுகள் பங்கேற்ற இம்மாநாட்டில் ஆசியான் வட்டாரத்தைச் சேர்ந்த ஜாக்கர்த்தா மற்றும் பெண்டுங் ஆகிய மாநகரங்களில் வரிசையில் சிலாங்கூர் தற்போது இடம்பெற்றுள்ள தகவலையும் மந்திரி பெசார் வெளியிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.