NATIONAL

பிரதமர் மீது நம்பிக்கை வைப்பீர்! - மாமன்னர் அறிவுறுத்து

22 நவம்பர் 2019, 5:34 AM
பிரதமர் மீது நம்பிக்கை வைப்பீர்! - மாமன்னர் அறிவுறுத்து

புத்ராஜெயா, நவ.22-

மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடம் இருந்து 33ஆவது வார அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்திய குறிப்பை பெற்றுக் கொண்டது மிகவும் அர்த்தமுள்ளதாக ஒரு நடவடிக்கையாகும். இஸ்தானா மெலாவாத்தியில் காலை 8மணிக்குத் தொடங்கிய இச்சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்ததாக தேசிய அரண்மை கண்காணிப்பு பொறுப்பாளர் டத்தோ அகமது ஃபாடைல் சம்சுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நாட்டின் 16ஆவது மாமன்னராக அல்=சுல்தான் பொறுப்பேற்ற பின்னர் 30ஆவது தடவையாக அமைச்சரவுக்கு முந்திய அறிக்கையை பெற்றார் என்பது ஓர் அர்த்தமுள்ள நடவடிக்கையாகு என்று அவர் குறிப்பிட்டார். அதேவேளையில், நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மற்றும் அவர்தம் அமைச்சரவை மீதும் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் மாமன்னர் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.