NATIONAL

பாலியல் வன்முறைகளில் இருந்து விலகியிருங்கள்! - சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்து

20 நவம்பர் 2019, 2:27 AM
பாலியல் வன்முறைகளில் இருந்து விலகியிருங்கள்! - சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்து

ஷா ஆலம், நவ.20-

பெண்களையும் சிறார்களையும் மதிப்பதோடு பாலியல் வன்முறை குற்றச்செயல்களில் இருந்து விலகி குடும்ப கௌரவத்தை பேணி காத்திட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா மக்களுக்கு நினைவுறுத்தினார்.

சிலாங்கூர் மாநில மன்னிப்பு வாரியத்தின் தலைவருமான அவர், மன்னிப்பு கோரும் பட்டியலில் சிறார் பாலியல் கொடுமை மற்றும் தகாத உறவு போன்ற குற்றச்செயல் புரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் குறிப்பிட்டு மேற்கண்டவாறு பேசினார்.

இவ்விவகாரத்தை மாநில ஆட்சியாளரரின் அந்தரங்க செயலாளர் டத்தோ முகமது முனிர் பாணி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சமுதாயத்தில் இது போன்ற பாலியல் வன்முறைகள் அதிகம் நடைபெறுவது சிலாங்கூர் சுல்தான் கவலை கொண்டுள்ளதாக அவ்வறிக்கை கூறியது.

இது போன்ற நடவடிக்கைகள் மாநில மக்களின் நன்னடத்தை மற்றும் குடும்ப கௌரவத்திற்கு பங்கத்தை ஏற்படுத்தும் என்று சுல்தான் கருதுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.