RENCANA PILIHAN

வெள்ள அபாயத்தைக் குறைக்க புதிய தொழில்நுட்பத்தை ஆராய்கிறது சிலாங்கூர்

19 நவம்பர் 2019, 5:29 AM
வெள்ள அபாயத்தைக் குறைக்க புதிய தொழில்நுட்பத்தை ஆராய்கிறது சிலாங்கூர்

கிள்ளான், நவ.19-

சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் முயற்சியாக திடல் அல்லது பொது வாகன நிறுத்துமிடத்தின் கீழ் நீர் தேக்கக் குளங்களை அமைக்கும் புதிய தொழில்நுட்பத்தை இம்மாநிலம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

நீர் தேக்க குழாய் முழுமையான பலனை அளிக்கும் வகையில் இப்பணிக்கு மாநில அரசு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், நவீன விவசாயம் மற்றும் அடிப்படை தொழிற்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்ஞீனியர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

“எந்தவொரு மேம்பாட்டு திட்டமும் முக்கிய அம்சங்களான கால்வாய் மற்றும் வெள்ள தேக்க குளம் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியாது” என்றார் இஷாம்.

அதே வேளையில், துரித மேம்பாட்டு பணிகள் வெள்ளம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவது நிச்சயம். இதனால் பொதுச் சொத்துகளுக்கு பேரழிவு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.