NATIONAL

உணர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது! - துன் மகாதீர்

16 நவம்பர் 2019, 5:53 AM
உணர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது! - துன் மகாதீர்

பொந்தியான், நவ.15:

தஞ்சோங் பியாய் தொகுதி மக்கள் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் வாக்களிக்கும் உணர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அறிவுறுத்தினார்.

அத்தொகுதியின் நன்மையை குறிப்பாக மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி தலைவருமான அவர் கூறினார்.

சேவை செய்ய இயலாதவரும் நாம் வாக்களித்தால், நமக்கு (தஞ்சோங் பியாய் வாக்காளர்களுக்கு) நஷ்டம். நாம் அவருக்கு ஓட்டு போட்டால், அவருக்கு பணம் (அலவன்ஸ்) கிடைக்கும், நமக்கு என்ன கிடைக்கும்? என்றவர் வினவினார்.

`சேவையாற்ற முடியாதவருக்கு வாக்களிக்கும் தவறை செய்ய வேண்டாம் என்று பொந்தியான் நகரில் இருந்து 35 நிமிட தூரத்தில் இருக்கும் குக்குப் லாவுட் இரவு சந்தை மைதானத்தில் நடந்த பிரதான பிரச்சாரக் கூட்டத்தில் மகாதீர் உரையாற்றினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.