RENCANA PILIHAN

அந்நிய நாட்டவர்களுக்கான சொத்துடமை உச்சவரம்பு மதிப்பு அடுத்தாண்டு அறிவிக்கப்படும்

15 நவம்பர் 2019, 7:50 AM
அந்நிய நாட்டவர்களுக்கான சொத்துடமை உச்சவரம்பு மதிப்பு அடுத்தாண்டு அறிவிக்கப்படும்

ஷா ஆலம், நவ. 15-

அந்நிய நாட்டவர்களுக்கான சொத்துடமைகளின் உச்சவரம்பு மதிப்பு குறித்து சொத்துடமை தொழில்துறையினருடன் மாநில அரசு விவாதம் நடத்தவிருக்கிறது.

ஆயினும், நிரணயிக்கப்படவிருக்கும் புதிய உச்சவரம்பு மதிப்பானது அண்மையில் 2020 வரவு செலவு திட்டத்தின் நிதியமைச்சு அறிவித்த விலையோடு ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் ஹானிஸா முகமது தல்ஹா கூறினார்.

சிலாங்கூரில் இதுவரை கட்டி முடிக்க்கப்பட்டு எத்தனை காலம் விற்கப்படாமல் இருக்கிறது என்பது போன்ற அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று அவர் விவரித்தார்.

எவ்வித எதிர்ப்பும் இல்லையென்றால், அந்நிய நாட்டவர்களுக்கான சொத்துடமை உச்சவரம்பு மதிப்பீடு குறித்து அடுத்தாண்டு முடிவெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.