NATIONAL

எஸ்ஆர்சி: ரிம.42 மில்லியன் நிதி முறைகேடு வழக்கில் தற்காப்பு வாதம்புரியும்படி நஜிப்பிற்கு உத்தரவு!

11 நவம்பர் 2019, 3:49 AM
எஸ்ஆர்சி: ரிம.42 மில்லியன் நிதி முறைகேடு வழக்கில் தற்காப்பு வாதம்புரியும்படி நஜிப்பிற்கு உத்தரவு!

கோலாலம்பூர், நவ.11-

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு தொடர்பாக தம்மீது சுமத்தப்பட்டுள்ள 7 குற்றச்சாட்டுகளை எதிர்த்து தற்காப்பு வாதம் புரியும்படி டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நீதிபதி நஸ்லான் முகமது கசாலி இன்று காலை 11.34 மணிக்கு இத்தீர்ப்பை அறிவித்தார்.

முன்னாள் பிரதமர் நஜிபி மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று நம்பிக்கை மோசடொ குற்றச்சாட்டுகள், மூன்று சட்டவிரோத நிதி பரிவர்த்தனை மற்றும் ஓர் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகிய 7 குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்துவதற்கான போதுமான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பித்துள்ளதால், இத்தீர்ப்பை தாம் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.

பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப், இக்குற்றங்களை 2011 ஆகஸ்டு 17ஆம் தேதிக்கும் 2015 மார்ச் 2ஆம் தேதிக்கும் இடையில் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.