RENCANA PILIHAN

டாருல் ஏசான் தண்ணீர் திட்டம்: முதல் பெயர் பட்டியல் மார்ச் 2020 வெளிவரும்!.

4 நவம்பர் 2019, 3:32 AM
டாருல் ஏசான் தண்ணீர் திட்டம்: முதல் பெயர் பட்டியல் மார்ச் 2020 வெளிவரும்!.

ஷா ஆலம், நவம்பர் 4:

டாருல் ஏசான் த்ண்ணீர் திட்டத்தின் முதல் பெயர் பட்டியல் வருமான வரி வாரியத்துடன் குறுக்கு சோதனை செய்த பின்னரே 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இத்திட்டத்திற்குத் தகுதி பெற்றவர்கள் இச்சலுகையைப் பெறுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்டவர்கள் www.ssipr.selangor.gov.my என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது விண்ணப்ப பாரங்களைப் பூர்த்தி செய்து நேரடியாக அனுப்புமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

“இதற்கான பதிவு நடவடிக்கை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிவிட்டது. பதிவு செய்வதற்கான இறுதி நாள் இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதியாகும்” என்றார் அவர்.

“2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இவ்விண்ணப்பங்கள் துல்லியமாகப் பர்சீலிக்கப்படும் என்றும் அதன் பின்னரே வெற்றிபெற்றவர்களின் முதல் பெயர் பட்டியல் வெளிவரும்” என்று அமிருடின் தெரிவித்தார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.