பொந்தியான், அக்டோபர் 27:
எதிர்வரும் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பெர்சாத்து வேட்பாளராக கர்மாயின் சார்டினி (படம்) அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குத் தங்களின் முழு ஆதரவை வழங்குவதாகவும், இடைத் தேர்தலில் அவர் வெற்றி பெற பிகேஆர் கட்சியினர் தீவிரமாகப் பாடுபடுவர் என்றும் பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
66 வயதான கர்மாயின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான பெர்சாத்து கட்சியின் தலைவருமாவார்.


