SELANGOR

புதிய தண்ணீர் கட்டணம் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்

16 அக்டோபர் 2019, 8:22 AM
புதிய தண்ணீர் கட்டணம் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்

பத்து கேவ்ஸ், அக்.15-

புதிய தண்ணீர் கட்டணம் குறித்து பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“ இன்னும் முடிவு செய்யப்படவில்லை, காலம் கணிந்தவுடன் இது குறித்து அறிவிக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்றார் அவர்.

“இவ்விவகாரம் குறித்து முதலில் மத்திய அரசு நன்கு ஆராய வேண்டும். இந்த புதிய கட்டணம் ஏக காலத்தில் அமல்படுத்தப்படுவது சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றும் அவர் சொன்னார்.

எனினும், தண்ணீர் என்பது மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட விவகாரமாகும். எனவே பொருத்தமான காலத்தில் அது அமல்படுத்துவது அவசியமாகும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.