NATIONAL

அடுத்தாண்டு மார்ச் மாதம் அமலுக்கு வரும் புதிய இலவச குடிநீர் திட்டத்தின் மூலம் 50% செலவினம் குறையும்

3 அக்டோபர் 2019, 10:00 AM
அடுத்தாண்டு மார்ச் மாதம் அமலுக்கு வரும் புதிய இலவச குடிநீர் திட்டத்தின் மூலம் 50% செலவினம் குறையும்

ஷா ஆலம், அக்.3-

2020 மார்ச் முதல் நாள் அமலுக்கு வரும் புதிய இலவச குடிநீர் திட்டத்தின் மூலம் மாநில அரசு 50 விழுக்காடு செலவினத்தை சேமிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய திட்டத்தின் உண்மையாகவே தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் இலவச குடிநீர் விநியோகிக்கப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“இப்போது நடப்பில் உள்ள இலவச குடிநீர் திட்டத்திற்காக 200 மில்லியன் வெள்ளி செலவிடப்படுகிறது. ஆயினும் அடுத்தாண்டு மார்ச் முதல் தேதி அம்ல்படுத்தப்படவிருக்கும் புதிய இலவச குடிநீர் திட்டத்திற்காக 100 மில்லியன் வெள்ளி மட்டுமே செலவிட வேண்டும்” என்றார் அவர்.

சுல்தான் சாலாஹுடின் அப்துல் அஸிஸ் ஷா கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்திம் அமிருடின் இத்தகவலை வெளியிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.