ANTARABANGSA

சுற்றுச் சூழலைப் பேணும் உடன்படிக்கை : மலேசியா உறுதியாக உள்ளது! - துன் மகாதீர்

27 செப்டெம்பர் 2019, 12:38 AM
சுற்றுச் சூழலைப் பேணும் உடன்படிக்கை : மலேசியா உறுதியாக உள்ளது! - துன் மகாதீர்

நியூயார்க், செப்.27-

விலங்குகள், வனப் பகுதிகள் மற்றும் சுற்றுச் சூழலைப் பேனும் உலக உடன்படிக்கை முழுமையாக செயல்படுத்துவதை உறுதிசெய்வதில் மலேசியா கடப்பாடு கொண்டுள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

இப்பூமியில் வாழும் அனைத்து மக்களின் உணவு, உடை மற்றும் வசிப்பிட உரிமை மீதான பொறுப்பை நிறைவேற்றுவதில் இந்த சுற்றுச் சூழல் உடன்படிக்கை எல்லா கோணங்களிலும் சமமாக உள்ளதை நாடு உணர்ந்துள்ளது என்று மலேசிய பிரதமர் தெரிவித்தார்.

அதேவேளையில், 1992ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற உலக உச்சநிலை மாநாட்டின் போது உலகின் 50 விழுக்காடு நிலப்பகுதி வனமாக இருப்பதை நிலைநிறுத்துவது குறித்து கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையில் நாடு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஆண்டுகள் 30ஐ கடந்துள்ள வேளையில் மலேசிய நிலப்பகுதியின் 55.3 விழுக்காடு அல்லது 18.3 மில்லியன் ஹெக்டர் பகுதி இன்னமும் வனமாக இருப்பதை தெரிவிப்பதில் பெருமையடைகிறேன். அளித்த வாக்குறுதியை நாங்கள் மீறவில்லை” என்று மகாதீர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.