NATIONAL

விவேக வட்டாரத்தை உருவாக்க பிரதமர் ஆவல்!

23 செப்டெம்பர் 2019, 6:58 AM
விவேக வட்டாரத்தை உருவாக்க பிரதமர் ஆவல்!

கோலாலம்பூர், செப்.23-

விவேக நகர மேம்பாட்டாளர்கள் பலர் தனித்து இயங்குவதால் ஒட்டுமொத்த விவேக நகர மேம்பாட்டு திட்டத்திற்கு இவை தடைகற்களாகியுள்ளன என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை எதிர்கொள்ள, வீடமைப்பு மற்று ஊராட்சி துறை அமைச்சு மலேசிய விவேக நகர செயல்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஆகீய இரு தரப்புகளை ஒன்றிணைக்கும் மூன்று கட்ட திட்டமாகும் என்றார் அவர்.

12ஆவது மலேசிய திட்டத்தில் விவேக வட்டாரமாக மலேசியாவை உருவாக்குவது ஒரு முக்கிய அம்சமாகும் என்றும் மகாதீர் சொன்னார். தனது குடிமக்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு உடனடியாகத் தீர்வு காணும் ஆற்றலை விவேக நகரங்கள் கொண்டிருக்கும். எனவே, புதிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க யுகத்தில் விவேக நகர உருவாக்கம் என்பது மிகவும் அவசியமானதாகும் லென்று அவர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.