NATIONAL

நாட்டில் ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் முற்றாக ஒழிக்கப்படும்! - பிரதமர்

9 செப்டெம்பர் 2019, 5:01 AM
நாட்டில் ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் முற்றாக ஒழிக்கப்படும்! - பிரதமர்

கோலாலம்பூர், செப்.9-

நாட்டில் ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றை துடைத்தொழிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதம்ர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

கூட்டரசு சட்டமைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் அதிகாரத்திற்கு சட்டத்திற்கும் ஓர் இடைவெளியை ஏற்படுத்தும் அரசு நிர்வாகத்தின் மூலம் இதனை அமல்படுத்த முடியும் என்றார் அவர்.

“நாட்டில் முறைகேடுகள் குறைக்கப்படுவதன் வழி முன்பிருந்ததைக் காட்டிலும் மலேசியா பாருவை ஊழலற்ற நாடாக விளங்கச் செய்ய முடியும் என நான் நம்புகிறேன்” என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.

மாமன்னரின் பிறந்த தினத்தை முன்னிட்டு முக்கிய பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மகாதீர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.