NATIONAL

ஓய்வூதியத் திட்டம் நிறுத்த பரிந்துரை விரிவாக ஆராயப்படும்! - துணைப் பிரதமர் உறுதி

5 செப்டெம்பர் 2019, 6:48 AM
ஓய்வூதியத் திட்டம் நிறுத்த பரிந்துரை விரிவாக ஆராயப்படும்! - துணைப் பிரதமர் உறுதி

கோலாலம்பூர், செப்.5-

பொது சேவைத் துறைக்கு புதிதாகத் தேர்வு பெறுவோரின் ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்படும் என்ற பரிந்துரை இன்னும் ஆய்வு நிலையில் இருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீஸா வான் இஸ்மாயில் கூறினார்.

“ முதலில் இப்பரிந்துரை அமைச்சரவைக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட வேண்டும். அதன் ஒப்புதலை பெற்ற பின்னரே அது நடப்புக்கு வரும். இப்பரிந்துரை குறித்து அங்கே விரிவாக விவாதிக்கப்படும்” என்று அவர் உறுதியளித்தார்.

“ ஆயினும், இந்தப் பரிந்துரை அமைச்சரவைக்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை. அது குறித்து அப்போது விரிவாக ஆராய்வோம்” என்று வர்த்தகத்தில் பெண்கள் எனும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் வான் அஜீஸா தெரிவித்தார்.

முன்னதாக, அடுத்தாண்டு தொடங்கி பொதுச் சேவைத் துறையில் புதிதாகப் பணிக்கமர்த்தப்படும் பணியாளர்கள் நிரந்திர ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அல்லாமல் மேம்படுத்தப்பட்ட குத்தகை முறையின் கீழ் பணிக்கமர்த்தப்படக் கூடும் என்று கடந்த புதன்கிழமையன்று பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ போர்ஹான் டோலா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.