NATIONAL

கெஅடிலான் மாநில மாநாடுகள் அக்டோபரில் தொடங்கும்

4 செப்டெம்பர் 2019, 11:37 PM
கெஅடிலான் மாநில மாநாடுகள் அக்டோபரில் தொடங்கும்

கோலாலம்பூர், செப்.5-

‘இருபது ஆண்டுகள் மறுமலர்ச்சி’ என்ற கருப்பொருள் கொண்ட மாநாடுகளை இவ்வாண்டு அக்டோபர் தொடங்கி ஒவ்வொரு மாநிலத்திலும் கெஅடிலான் நடத்தவிருக்கிறது.

இந்த மாநாடுகளில் கட்சியின் கொள்கை குறித்து தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கமளிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் இது நடைபெற்று முடிந்ததும் டிசம்பர் 6 தொடங்கி டிசம்பர் 8ஆம் தேதி வரையில் கெஅடிலான் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு நடைபெறும் என்று கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குநர் அகமது ஃபாஹ்மி ஃபாட்ஸில் கூறினார்.

“நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் தேதிகளும் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கும் தேதிகளும் முடிவான பின்னர் இந்த மாநாடுகளின் அட்டவணை அறிவிக்கப்படும்” என்றார் அவர்.

இந்த மாநாடுகள் மாநிலங்கள் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.