NATIONAL

அனைத்து இன உணர்வுகளை மதிக்க வேண்டும் - துன் மகாதீர் கோரிக்கை

28 ஆகஸ்ட் 2019, 12:15 PM
அனைத்து இன உணர்வுகளை மதிக்க வேண்டும் - துன் மகாதீர் கோரிக்கை

கோலா லம்பூர், ஆகஸ்ட் 28:

62-ஆம் சுதந்திர தின விழாவை கொண்டாடவிருக்கும் மலேசிய திருநாட்டில், ஒருமைப்பாட்டை மதித்து அனைத்து மக்களும் இனத்துவாத சித்தாந்தத்தை தவிர்த்து விடும்படி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வேண்டுகோள் விடுத்தார். மலேசிய மக்கள் தங்களது நடவடிக்கை மற்றும் உரையாடல்கள் மற்ற இனங்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைவு படுத்தினார்.

" நாம் அனைவரும் வார்த்தைகளை வெளியிடும் போது கவனமுடன் இருக்க வேண்டும். மற்ற இனங்களின் உணர்வுகளை பாதிக்காத வண்ணம் பார்த்து நடந்து கொள்ள வேண்டும். நமது உரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகள் மற்றவர்களின் பார்வையில் இனவாதியாக தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது," என்று துன் மகாதீரின் "சேடேட் ஓபிஷல்' யூடியூப்பில் 'சுதந்திரத்தை பற்றி டாக்டர் மகாதீர் என்ன கூறுகிறார்' என்ற காணோளியில் இவ்வாறு கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.