RENCANA PILIHAN

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊடங்களின் பங்களிப்பு அளப்பரியது - அமிருடின் ஷாரி

22 ஆகஸ்ட் 2019, 12:14 AM
நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊடங்களின் பங்களிப்பு அளப்பரியது - அமிருடின் ஷாரி

சுபாங், ஆக.22-

மக்கள் மத்தியில் ஒருமைப்பாடும் அமைதியும் நிலைத்திருப்பதற்கு செய்தி ஊடகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஆக்கப்பூர்வமான செய்திகளை வெளியிடுவதிலும் உண்மையான, பிறர் உணர்வுகளைப் பாதிக்காத, பல்வேறு சமய, இன தொடர்பான செய்திகள் மற்றும் பொருளாதார கோணத்திலான செய்திகளையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நாடு குறிப்பாக சிலாங்கூரின் பொருளாதார மேம்பாடு குறித்து விளம்பரப்படுத்துவதில் அச்சு, மின்னியல் மற்றும் இணைய ஊடகங்கள் என அனைத்து ஊடகங்களும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் பாராட்டினார்.

“மலேசியாவை ஒரு வளமிக்க நாடாக மேம்படுத்துவதில் நம் அனைவருக்கும் வெவ்வேறு பொறுப்புகள் உள்ளன. எனவே, மாநில அரசுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்வது அவசியம்” என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.