RENCANA PILIHAN

பொறுப்பற்ற ஊடக செய்தியாளர்களை எதிர்கொள்வதே பெரும் சவாலாகும்

5 ஆகஸ்ட் 2019, 4:33 AM
பொறுப்பற்ற ஊடக செய்தியாளர்களை எதிர்கொள்வதே பெரும் சவாலாகும்

சுபாங், ஆக.5:

சமூக ஊடகங்களின் பொறுப்பற்ற “ஊடக செய்தியாளர்களை” எதிர்கொள்வதில் அரசாங்கமும் பாதுகாப்பு அமைப்புகளும் [பெரும் சவாலை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பொறுப்பற்ற சமூக ஊடகவியலாளர்கள் தாங்கள் பரப்பும் செய்திகள் ஏற்படுத்தும் விளைவுகளை புரிந்து கொண்டிருக்கவில்லை என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“அன்றைய நாட்களில் நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகிய ஊடகங்கள் மட்டுமே செய்திகளை வெளியிட்டன. இந்தச் செய்திகள் யாவும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையாக இருந்தன.”

“ஆனால், இன்றைய நவீன தொடர்பு யுகத்தில் செய்திகள் சமூக ஊடகங்கள் வழி அதிவிரைவாகப் பரவுகின்றன. இவற்றை எதிர்கொள்வது பெரும் சவாலாக உருமாறியுள்ளது” என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.