PBT

அல்ட்ரா டிரெயில் 50 கீமீ ஓட்டம் எம்எச்டிஎஸின் ஒரே பங்கேற்பாளர் ஓடி முடித்தார்

23 ஜூலை 2019, 5:28 AM
அல்ட்ரா டிரெயில் 50 கீமீ ஓட்டம் எம்எச்டிஎஸின் ஒரே பங்கேற்பாளர் ஓடி முடித்தார்

உலு சிலாங்கூர், ஜூலை 23-

அல்ட்ரா டிரெயில் ஓட்டத்தில் (எச்எஸ்யுடி) 2019 இல் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின் (எம்எச்டிஎஸ்) சார்பில் பங்கேற்ற ஒரே பங்கேற்பாளர் 50 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடி முடித்தார்.

13 மணி 45 நிமிடங்களில் இந்தத் தூரத்தை ஓடி முடித்த முகமது யூசோப் சைடினா அபு பாக்கார் ( வயது 36) லாதா மேடாங்கைக் கடந்து புக்கிட் குதுவின் உச்சத்தை அடைந்த பின்னர் கம்போங் புலோ தெலுர் மற்றும் அம்பாங் பெச்சா ஆகிய பகுதிகளைக் கடந்து ஓட்டம் தொடங்கப்பட்ட கம்போங் பெர்தாக்கை வந்தடைந்தார்.

பள்ளிப் பருவம் முதற் கொண்டே எனக்கு ஓட்டப்பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் என்று கூறிய யூசோப், 15ஆண்டுகளுக்குப் பின்னர் நீண்ட தூர மராத்தோன் போட்டியில் பங்கேற்றதாகவும் ஆயினும் அல்ட்ரா டிரெயிலில் பங்கேற்பது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.

இந்தத் தொலை தூர ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதற்கு உடல் வலிமையோடு மன வலிமையும் அவசியம் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.