NATIONAL

தீச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

22 ஜூலை 2019, 4:48 PM
தீச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜோகூர் பாரு, ஜூலை 22-

நாட்டில் தீச்சம்பங்கள் அதிகரித்துள்ளன. 2017ஆம் ஆண்டில் தீயணைப்பு துறை 28,853 அழைப்புகளைப் பெற்ற வேளையில் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 36, 043 ஆக உயர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

புள்ளி விவரப் பட்டியலின்படி கடந்தாண்டு ஜோகூர் மாநிலம் 4,928 அழைப்புகளைப் பெற்றுள்ளது, முந்தைய ஆண்டில் இம்மாநிலம் 3, 610 அழைப்புகளை மட்டுமே பெற்றன என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் டத்தோ சொய்மான் ஜாஹிட் கூறினார்.

இந்த எண்ணிக்கை நாட்டில் தீச்சம்பவங்கள் அதிகளவில் ஏற்பட்டு வருவதையே காட்டுகிறது. இந்தச் சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு ஆக்கப்பூர்வ அமலாக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்றார் அவர்.

கடந்தாண்டு ஏற்பட்ட தீச்சம்பவங்களினால் 3.3 பில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் ஏற்பட்ட இழப்பான 5.2 பில்லியன் வெள்ளியைக் காட்டிலும் குறைவாக உள்ளது என்று சொய்மான் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.