ANTARABANGSA

கலைஞரின் மறைவுக்கு மந்திரி பெசார் இரங்கல் செய்தி

9 ஆகஸ்ட் 2018, 4:12 PM
கலைஞரின் மறைவுக்கு மந்திரி பெசார் இரங்கல் செய்தி

தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு சிலாங்கூர் மாநில அரசு அதன் வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.பழுத்த அரசியல் அனுபவமும் நீண்டக்கால மக்கள் சேவையில் தனித்துவ சிறப்பையும் கொண்டிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் இறப்பு தமிழ்நாட்டிற்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் மட்டுமின்றி உலக அளவில் அவரை போற்றி வந்த அனைவருக்கும் அஃது பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் தொடண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்.

மாண்புமிகு அமிரூடின் சஹாரி.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.