Uncategorized @ta

மந்திரி பெசார்: நான் சீனாவுக்கு சென்றது, அமெரிக்காவிடம் நஜீப்பை போன்று மண்டியிட அல்ல

28 அக்டோபர் 2017, 7:45 AM
மந்திரி பெசார்: நான் சீனாவுக்கு சென்றது, அமெரிக்காவிடம் நஜீப்பை போன்று மண்டியிட அல்ல

ஷா ஆலம், அக்டோபர் 28:

சீனா நாட்டிற்கு தாம் அதிகாரப்பூர்வ வருகை புரிந்தது முதலீடுகளை சிலாங்கூருக்கு கொண்டு வருவதற்கே என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஆணித்தரமாக கூறினார். தனது நடவடிக்கையை நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த போது பின்பற்றி இருக்க வேண்டும்.

" நமது அடைவு நிலையை தேசிய புள்ளியல் இலாகா மறுஉறுதி செய்துள்ளது. ஆனால், நஜீப் அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த மக்களின் பணத்தை பயன் படுத்த இருக்கிறார். எனக்கும் நஜீப்பிற்கும் உள்ள வித்தியாசம் நான் மண்டியிட தேவையில்லை," என்று விவரித்தார்.

நஜீப் நேற்று தாக்கல் செய்ய வரவு செலவுத் திட்டத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சிலாங்கூர் மாநிலம், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் அடமானம் வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்

#வீரத் தமிழன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.