RENCANA PILIHAN

அரசு ஊழியர்களின் பங்கை குறைத்து மதிப்பிடவேண்டாம்- அஸ்மின் அலி

4 அக்டோபர் 2017, 11:11 AM
அரசு ஊழியர்களின் பங்கை குறைத்து மதிப்பிடவேண்டாம்- அஸ்மின் அலி

ஷா ஆலம்,அக்டோபர் 4:

மத்திய மற்றும் மாநில அளவிலான அரசு ஊழியர்களின் பங்கை குறைத்து மதிப்பிடவேண்டாம் என்பதை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப்புக்கு நினைவுப் படுத்துவதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட் அஸ்மின் அலி தெரிவித்தார். அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடாததால் அவர்களைக்  குறைத்து

மதிப்பிட்டிருப்பதன் வழி  நஜிப் இம்முறை தவறான அணுகுமுறையைக்

கையாண்டிருப்பதாக அஸ்மின் கூறினார்.

பொதுப்பணிச் சேவையின் உறுப்பினர்கள் எப்போதும் பொதுச் சேவை கோட்பாடுகளை

கடைப்பிடித்தல்  வேண்டும் நேர்மையுடன், ஊழல் இல்லாதவர்களாக, பணியில்

நிபுணத்துவத்துடன் செயல்பட  வேண்டும் என்று

அஸ்மின் தெரிவித்தார். அரசியலில் ஈடுபடாத அரசாங்க ஊழியர்களை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம்

என்று அஸ்மின் நஜீப்பைக் கேட்டுக் கொண்டார்.

அரசாங்க ஊழியர்கள்  அனுபவித்து வரும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும். மலேசியா எதிர்க்கட்சிகளின் ஆதிக்கத்துக்குள்

விழுந்து விடச் செய்யக் கூடாது. அப்படி செய்வது நன்றி மறக்கும்

என்று நேற்று நஜிப் அரசாங்க ஊழியர்களுக்கு  விட்டிருந்த

நினைவுட்டுட்டலுக்கு  எதிர்வினையாக அஸ்மின் கருத்தை முன்வைத்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மாநிலத்தில் பணிப்புரியும் அரசாங்க

ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்கள் எது சரி என்று பார்க்கும் நிலையில் முதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று அஸ்மின் கூறினார்.

#சரவணன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.