NATIONAL

சமூக நல இலாகா, தந்தையினால் செக்ஸ் கொடுமைக்கு ஆளான சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்

11 ஆகஸ்ட் 2017, 1:58 AM
சமூக நல இலாகா, தந்தையினால் செக்ஸ் கொடுமைக்கு ஆளான சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்

கோலா லம்பூர், ஆகஸ்ட் 11:

சமூக நல இலாகா தந்தையினால் செக்ஸ் கொடுமைக்கு ஆளான சிறுவர்களை, வழக்கு முடியும் வரை பாதுகாப்பு அளிக்கும் என்று மகளிர் மேம்பாடு, குடும்பம் மற்றும் சமூக நல அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரோஹானி அப்துல் கரீம் கூறினார். தமது அமைச்சு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் என்று தெரிவித்தார்.

"   தற்போது வழக்கு நடந்து வருவதால், நாம் விசாரணையில் குறுக்கீடு செய்ய முடியாது. ஆனால், நீதிமன்றமோ அல்லது காவல்துறையோ ஆணையிட்டால் கண்டிப்பாக ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். இது போன்ற சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நெருங்கிய சொந்தக்காரர்கள் அல்லது சிறுவர்களை பராமரிக்க முடியாத நிலையில் இருந்தாலோ, சமூக நல இலாகா சம்பந்தப்பட்ட சிறுவர்களை தற்காலிகமாக பராமரிக்கும்," என்று பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.