ANTARABANGSA

நீர்மூழ்கி கப்பல் மோசடி, ரசாக் பகிண்டா பிரான்ஸில் குற்றம் சாட்டப்பட்டார்

1 ஆகஸ்ட் 2017, 1:30 PM
நீர்மூழ்கி கப்பல் மோசடி, ரசாக் பகிண்டா பிரான்ஸில் குற்றம் சாட்டப்பட்டார்
நீர்மூழ்கி கப்பல் மோசடி, ரசாக் பகிண்டா பிரான்ஸில் குற்றம் சாட்டப்பட்டார்

கோலா லம்பூர், ஆகஸ்ட் 1:

நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் நெருங்கிய சகாவான அப்துல் ரசாக் பகிண்டா 2002-இல் மலேசியா கொள்முதல் செய்த நீர்மூழ்கி கப்பல் பரிவர்த்தனையில் கையூட்டு பெற்றதாக பிரான்ஸ் நாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று நீதித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

razak-scorpene-submarines-300x202

 

 

 

 

 

 

ஏஎப்ஃபி செய்தி நிறுவனத்தின் தகவல் படி, ரசாக் பகிண்டா 2002-இல் இருந்து 2008 வரை தற்காப்பு அமைச்சராக இருந்த நஜிப் ரசாக்கிற்கு நீர்மூழ்கி கப்பல் தொடர்பில் ஆலோசகராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நஜிப் ஏறக்குறைய  €1 பில்லியன் (ரிம 5.06 பில்லியன்) மதிப்பிலான இரண்டு ஸ்கோர்பியன் நீர்மூழ்கி கப்பல்களும் மற்றொரு அகோஸ்தா நீர்மூழ்கி கப்பலும் டிசிஎன்னிடம் வாங்கினார். டிசிஎன் தற்காப்பு நிறுவனமான தேல்ஸ் உடன் தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-இல் மனித உரிமை இயக்கமான, சுவாராம் நீர்மூழ்கி கப்பல் பரிவர்த்தனை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற புகார் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.