NATIONAL

நாடாளுமன்றம் செயல் இழந்து காணப்படுகிறது, அஸாலீனா மிக மோசமான பிரதமர் துறை அமைச்சர் !!!

27 ஜூலை 2017, 4:23 AM
நாடாளுமன்றம் செயல் இழந்து காணப்படுகிறது, அஸாலீனா மிக மோசமான பிரதமர் துறை அமைச்சர் !!!
நாடாளுமன்றம் செயல் இழந்து காணப்படுகிறது, அஸாலீனா மிக மோசமான பிரதமர் துறை அமைச்சர் !!!

கோலா லம்பூர், ஜூலை 27:

மத்திய அரசாங்க நிர்வாகத்தின் கீழ் உள்ள அமைச்சரவையில் செயல்படும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலீனா ஓஸ்மான் படுமோசமான அமைச்சராக கருதப்படுகிறார் என்று சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் கூறினார். நாடாளுமன்றத்தை சிறந்த செயல்பாடுகள் கொண்டு நடத்துவதில் தோல்வி அடைந்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளை எந்த காரணங்களும் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டது அடிப்படையில் அந்தோணி கூறினார்.

"  டத்தோ ஸ்ரீ ஷாஹிடான் காஸ்ஸிமுக்கு பதிலாக வந்த அஸாலீனா பிரதமர் துறை அமைச்சர்களிலே படுமோசமான அமைச்சர். பிரதமர் மீது தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அப்படி பதில் சொல்ல முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள்," என்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

 

ANTONY LOKE

 

 

 

 

 

இதற்கு முன்பு, அந்தோணி நாடாளுமன்றத்தில் கடந்த ஜூன் 25-இல் நடைபெற்ற பிரதமரின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் மொத்த செலவீனங்கள் குறித்து கேட்டபோது அஸாலீனா எந்த ஒரு எண்ணிக்கையையும் கொடுக்காதது தொட்டு பேசிய போது நாடாளுமன்றத்தில் கூறினார். ஏற்கனவே 1எம்டிபி ஊழலை பற்றிய எந்த ஒரு கேள்விகளையும் கேற்க முடியாது என்று சபாநாயகர் ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.