SUKANKINI

எப்ஃஏ கிண்ண இறுதி ஆட்டம் ஷா ஆலம் அரங்கிலே தொடர்ந்து நடக்கும்

13 மே 2017, 2:04 PM
எப்ஃஏ கிண்ண இறுதி ஆட்டம் ஷா ஆலம் அரங்கிலே தொடர்ந்து நடக்கும்

ஷா ஆலம், மே 13:

மலேசிய கால்பந்து சங்கம் (எப்ஃஏஎம்) தங்களின் முடிவில் இருந்து மாறாது. எப்ஃஏ கிண்ண இறுதி ஆட்டம் எதிர் வரும் மே 20-இல் ஷா ஆலம் அரங்கில் நடக்கும் எனவும் புக்கிட் ஜாலில் அரங்கில் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மலேசிய அரங்க வாரியம் இறுதி ஆட்டத்தை புக்கிட் ஜாலில் அரங்கில் நடத்தலாம் என ஆலோசனை வழங்கியது. ஆனால், கார் நிறுத்துமிட சேவை பற்றாக்குறை காரணமாக ஷா ஆலம் அரங்கிலே நடத்த முடிவு செய்யப்பட்டது எனவும் கால்பந்து ரசிகர்களின் வசதிக்கு ஏற்ப எப்ஃஏஎம் மற்றும் எப்ஃஎம்எல்எல்பி சேர்ந்து இந்த முடிவு எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்ஃஏஎம்-இன் பொதுச் செயலாளர், டத்தோ ஹாமிடின் முகமட் அமின் எல்லா அம்சங்களையும் சீர்தூக்கி பார்த்து மிக சிறந்த முடிவு எடுத்ததாக கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.