RENCANA PILIHAN

மந்திரி பெசார் மூன்று நாடுகளுக்கான பயணம்

29 ஏப்ரல் 2017, 1:44 PM
மந்திரி பெசார் மூன்று நாடுகளுக்கான பயணம்

ஷா ஆலம், 29 ஏப்ரல்:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அவர்கள் மே 1 இருந்து மே 5 வரை மொரோக்கோ, ஜோர்டான் மற்றும்  எகிப்து நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு அங்கு கல்வி கற்கும் சிலாங்கூர் மாணவர்களை சந்திக்க இருக்கிறார்.

இந்த சந்திப்பு சிலாங்கூர் மாணவர்களுக்கு மாநில அரசாங்கத்தின் உதவி நிதிகளை வழங்கவும்  இந்த மூன்று நாடுகளில் படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்த  உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகமட் அஸ்மின்  இந்த நாடுகளின் மலேசியா தூதர்களையும் சந்திக்க  ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த பயணத்தில் மாநில சுகாதாரம், பொதுநல  மற்றும் மகளிர்  குடும்ப நல  ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி மற்றும் மாநில அரசாங்க  அதிகாரிகளும் கலந்து கொள்பவர.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.