சிலாங்கூர் ரும்புன் நோன்புக் கஞ்சி விநியோகம்: மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

27 பிப்ரவரி 2026, 8:31 AM
சிலாங்கூர் ரும்புன் நோன்புக் கஞ்சி விநியோகம்: மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

ஷா ஆலாம், பிப் 27- உலு சிலாங்கூர், ஃபெல்டா சுங்கை திங்கி ரமலான் சந்தையில் நடைபெற்ற ‘பஜார் சந்திப்பு மற்றும் நோன்புக் கஞ்சி விநியோகத் திட்டத்தின்’ கீழ், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 1,000 கஞ்சி மற்றும் பேரீச்சம்பழப் பொட்டலங்களை வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகித்தார்.

இந்த நிகழ்வில் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயிலுடன் கலந்துகொண்ட மந்திரி புசார், அங்குள்ள துறைத் தலைவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியதோடு, சிறுவர்களுக்குப் பெருநாள் பணத்தையும் வழங்கி மகிழ்வித்தார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத் (MPHS) தலைவர் மற்றும் முக்கியப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், வருகையாளர்கள் மந்திரி புசாருடன் கைகுலுக்கியும் சுயப்படம் எடுத்தும் உற்சாகமாகத் தங்களின் வரவேற்பை வெளிப்படுத்தினர்.

அதே வேளையில், பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் (PLATS) நிறுவனம் அங்குள்ள சிறு தொழில் முனைவோரை ‘கோ டிஜிட்டல்’ திட்டத்தில் இணைப்பதற்கான சிறப்புப் பதிவு மையத்தையும் அந்த பஜாரிலேயே திறந்திருந்தது.

சிலாங்கூர் சுல்தானின் ‘இஹ்யா ரமலான்’ முயற்சியின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 11 இடங்களில் மொத்தம் 11,000 நோன்புக் கஞ்சி பொட்டலங்களை வழங்கும் இந்தத் திட்டம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி பிகேஎன்எஸ் சந்தை முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

கிராமப்புற மேம்பாடு மற்றும் ஒற்றுமை இலக்குகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், ரமலான் மாதம் முழுவதும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்குப் பயன் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

தொடர்புடைய செய்திகள்

பதவிக்காலக் கட்டுப்பாடு: சீர்திருத்தங்களை முன்னெடுப்பது கூட்டுப் பொறுப்பாகும் - அமிருடின் ஷாரி

Mavitthran
3 மார்ச் 2026
பதவிக்காலக் கட்டுப்பாடு: சீர்திருத்தங்களை முன்னெடுப்பது கூட்டுப் பொறுப்பாகும் - அமிருடின் ஷாரி

நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது போன்ற சிக்கல்களைக் கையாள்வதற்கு சிலாங்கூர் மாநில தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) நிர்ணயித்துள்ள இந்த நடைமுறை சிறந்த வழியாகும்

Pakiya
14 பிப்ரவரி 2026
நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது போன்ற சிக்கல்களைக் கையாள்வதற்கு சிலாங்கூர் மாநில தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) நிர்ணயித்துள்ள இந்த நடைமுறை சிறந்த வழியாகும்

சிலாங்கூர் மிகப்பெரிய சோலார் பண்ணையை உருவாக்குகிறது, 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பிவி பெஸ்தாரி திட்டம்

Pakiya
10 பிப்ரவரி 2026
சிலாங்கூர் மிகப்பெரிய சோலார் பண்ணையை உருவாக்குகிறது, 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பிவி பெஸ்தாரி திட்டம்

கோலா லங்காட் நகராட்சி மன்றம், பந்திங்-கிள்ளான் சாலையில் சட்டவிரோத குப்பைகளை அகற்றும் நடவடிக்கை.

Pakiya
1 ஏப்ரல் 2026
கோலா லங்காட் நகராட்சி மன்றம், பந்திங்-கிள்ளான் சாலையில் சட்டவிரோத குப்பைகளை அகற்றும் நடவடிக்கை.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.