அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித் திட்டம்: ஒருவரிடம் போலீஸ் விசாரணை

5 மார்ச் 2026, 8:17 AM
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித் திட்டம்: ஒருவரிடம் போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், மார்ச் 5- மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறப்படும் சதித் திட்டம் குறித்து, ஒரு நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் படைத் தலைவர் முகமட் காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட சில காலத்திலேயே தானாக முன்வந்து இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய சில பெயர்களைப் போலீசார் கண்டறிந்துள்ள நிலையில், விசாரணைக்காக மேலும் மூன்று அல்லது நான்கு நபர்கள் விரைவில் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுக் கூறுகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் கருத்தில்கொண்டு இந்த விசாரணை மிகவும் கவனமாகவும் விரிவாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் நிதியமைச்சர் டாயிம் ஜைனுடினின் மனைவி நயிமா காலித் இதில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்ற கேள்விக்கு, அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று காலித் இஸ்மாயில் பதிலளித்தார்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் தலையீடு குறித்து எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்தச் சதித் திட்டம் தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.