ஓராங் அஸ்லி கிராமங்களிலும் ருக்கூன் தெத்தங்கா (KRT) திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் தயார்

1 மார்ச் 2026, 5:04 AM
ஓராங் அஸ்லி கிராமங்களிலும் ருக்கூன் தெத்தங்கா (KRT) திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் தயார்

கோலாலம்பூர், மார்ச் 1 - உள்ளூர் சமூகத்தின் விண்ணப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, ஓராங் அஸ்லி கிராமங்களிலும் ருகூன் தெத்தங்கா (KRT) திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் தயாராக உள்ளது.

நாடு தழுவிய அளவில் இதுவரை 8,603 ருக்கூன் தெத்தங்கா
பகுதிகள் நிறுவப்பட்டுள்ளன, அவற்றில் 16 ஓராங் அஸ்லி கிராமங்களில் அமைந்துள்ளன என்று தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் மேலவையில் கூறினார்.

"சமூகத்தின் கோரிக்கையின் அடிப்படையில், தன்னார்வ உணர்வோடு ஆண்டுதோறும் சுமார் 100 புதிய KRT-க்கள் நிறுவப்படுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு KRT-க்கும் நிர்வாகம் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்த ஆண்டுதோறும் RM6,000 மானியம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொருளாதாரம், நலன், கல்வி, சமய நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான 101,157 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், சமூகத்தின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவும் 'KRT புரோக்ரெசிஃப்' முயற்சிக்கு இந்த ஆண்டு கூடுதலாக RM5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.