தைப்பிங்கில் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது

25 பிப்ரவரி 2026, 3:13 AM
தைப்பிங்கில் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது

ஈப்போ, பிப் 25 - தைப்பிங்கில் புயல் மற்றும் மரம் முறிந்து விழுந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 92ஆக இருந்த நிலையில், இன்று காலை 30ஆகக் குறைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் லாரூட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள தாமான் காயா பல்நோக்கு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.

"பாதிக்கப்பட்ட அனைவரும் தாமான் டாமாய், தாமான் ரியா, தாமான் காயா, தாமான் டேசா செமர்லாங் மற்றும் பத்து 2 ½ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள்," என்று அந்த செயலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், லாரூட், மாத்தாங், செலாமா, மஞ்சோங், பேராக் தெங்கா, ஈலிர் பேராக், கோல கங்சார், கிந்தா, கம்பார், பாடாங் மற்றும் முவாலிம் உள்ளிட்ட பேராக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) கணித்துள்ளது.

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.