ஊழல் தடுப்பு ஆணையத்தால் முன்னாள் இயக்குனர் கைது

23 பிப்ரவரி 2026, 6:15 AM
ஊழல் தடுப்பு ஆணையத்தால் முன்னாள் இயக்குனர் கைது

கோலாலம்பூர், பிப் 23: சுமார் 8 மில்லியன் மலேசிய ரிங்கிட் லஞ்சம் கொடுத்த சந்தேகத்தின் பேரில், தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் முன்னாள் இயக்குனரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

ஒரு வங்கியின் குழும மேலாண்மை இயக்குனர் கடன் விண்ணப்பத்தை அங்கீகரிக்க உதவியதற்காக, இந்த லஞ்சத் தொகை வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர், புத்ராஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது, மதியம் சுமார் 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் இந்தச் செயலை 2012-ஆம் ஆண்டில் செய்ததாகத் தெரியவந்துள்ளது. ஒரு ஃபைபர் ஆப்டிக் திட்டத்திற்காக சுமார் 400 மில்லியன் மலேசிய ரிங்கிட் கடன் பெறுவதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்ய, 'கூட்டு நிறைவு உத்தரவாதம்' தொடர்பான போலி விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அவர் சமர்ப்பித்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

 இதற்கிடையில், ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிறப்புச் செயல்பாட்டுப் பிரிவின் மூத்த இயக்குனர் டத்தோ முகமட் ஜம்ரி ஜைனுல் அபிடின் இந்தத் தடுத்து வைப்பை உறுதிப்படுத்தினார்.

இந்த வழக்கு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் பிரிவு 16(பி)(ஏ) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 471 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும், சந்தேக நபர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.