போக்குவரத்தை மேம்படுத்த லெபோ புத்ரியில் யூ-முறை பாலம் கட்டப்படுகிறது – எம்பிஎஸ்ஜே

22 பிப்ரவரி 2026, 1:48 AM
போக்குவரத்தை மேம்படுத்த லெபோ புத்ரியில் யூ-முறை பாலம் கட்டப்படுகிறது – எம்பிஎஸ்ஜே

ஷா ஆலம், பிப் 22: பூச்சோங், லெபோ புத்ரி, பண்டார் புத்ரி பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக உயர்மட்ட யூ-முறைப் பாலம் (Elevated U-Turn Bridge) ஒன்றை சுபாங் ஜெயா மாநகராட்சி (எம்பிஎஸ்ஜே) நிர்மாணிக்க உள்ளது.

போக்குவரத்து மேலாண்மை திட்டம் (TMP) கட்டம் 1-இன் கட்டுமானப் பணிகள் நாளை தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறும். இக்காலக்கட்டத்தில் சாலைகள் ஏதும் (லேன்) மூடப்படாது என்றும் சுபாங் ஜெயா மாநகராட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கட்டுமானப் பணிகள் திங்கள் முதல் சனி வரை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

“சாலை பயனாளர்கள் கவனமாக வாகனத்தைச் செலுத்தவும், அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறிவிப்புப் பலகைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் வரை போக்குவரத்து சீராகவும் பாதுகாப்பாகவும் அமைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.