முய் தாய் விளையாட்டில் குறைந்தது நான்கு தங்கப் பதக்கங்களுக்கு சிலாங்கூர் இலக்கு

8 பிப்ரவரி 2026, 2:05 AM
முய் தாய் விளையாட்டில் குறைந்தது நான்கு தங்கப் பதக்கங்களுக்கு  சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம் பிப் 8: எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவுள்ள மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா), முய் தாய் விளையாட்டில் குறைந்தது நான்கு தங்கப் பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.

சிலாங்கூரில் சுக்மா போட்டிகளில் முய் தாய் ஒரு புதிய விளையாட்டாகக் கருதப்பட்டாலும், மாநில வீரர்களின் தயார்நிலை தற்போது சுமார் 90 விழுக்காட்டை எட்டியுள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.

"சுக்மாவில் முய் தாய் விளையாட்டிற்காகக் குறைந்தது நான்கு தங்கப் பதக்கங்களை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த இலக்கை அடைய சங்கம் தற்போது தீவிரமான, இலக்கு நோக்கிய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது," என்றார்.

"சிலாங்கூர் முய் தாய் லீக் 1.0 முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் இதற்கு முன்பு சிறிய கழகங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த லீக் போட்டியின் மூலம், சிலாங்கூரில் முய் தாய் விளையாட்டை வலுப்படுத்தவும், அதன் வளர்ச்சியை மேம்படுத்தவும் இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இங்கு, செக்ஷன் 25-இல் உள்ள குளோரியஸ் ஃபைட் கிளப்பில் நடைபெற்ற சிலாங்கூர் முய் தாய் லீக் 1.0-ஐ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, முய் தாய் விளையாட்டு ஒரு வன்முறை விளையாட்டாகத் தவறாகப் பார்க்கப்பட்ட முந்தைய நிலையை விட, தற்போது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருவதாக முகமது நஜ்வான் குறிப்பிட்டார்.

"முன்பு, சில பெற்றோர்கள் முய் தாய் ஒரு வன்முறை விளையாட்டு அல்லது ஆக்ரோஷமான உடல்ரீதியான தொடர்பைக் கொண்டது என்று கருதினர். ஆனால், தற்போது அதிகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இளம் வயதிலேயே முய் தாய் போட்டிகளில் சேர்ப்பதால் அந்தப் பார்வை மாறி வருகிறது."

"உண்மையில், பங்கேற்பாளர்களி
டையே முய் தாய் உடல் வலிமையை மட்டும் வளர்ப்பது இல்லை, ஒழுக்கம் மற்றும் மரியாதை போன்ற நற்பண்புகளையும் அது புகட்டுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.