கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளத் தணிப்பு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது

12 ஜனவரி 2026, 4:09 AM
கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளத் தணிப்பு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது

ஷா ஆலம், ஜன 12: கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்றத்தில் கால்வாய் அகலப்படுத்தும் திட்டம் தற்போது தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஸ் கூறினார்.

தாமான் ஸ்ரீ மூடா, செக்‌ஷன் 25இல் உள்ள திட்டம், பொறியியல் பணிகள் மற்றும் துணை உள்கட்டமைப்பு கட்டுமானத்தை உள்ளடக்கிய நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி செயல்படுத்தப்படும் வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

"கால்வாய் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன, இதில் பல பொறியியல் அம்சங்கள் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், ஜாலான் புக்கிட் கெமுனிங்கில் ஒரு புதிய kunci air செயல்படுத்தப்பட்டு வருகிறது.

"இதுவரை, அனைத்தும் திட்டத்தின் படி நடந்து வருகின்றன. இந்த நடவடிக்கை வெள்ள அபாயத்தைக் குறைக்க முடியும் என நம்புவதாக," தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு பள்ளி உதவிகளை வழங்கும் விழாவில் சந்தித்தபோது பிரகாஷ் கூறினார்.

மேலும், ஆலம் இண்டா மற்றும் கிரீன்ஹில்ஸ் போன்ற வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் பல பகுதிகளிலும் சீரான நீர் ஓட்டத்தை உறுதி செய்வதற்காக வடிகால்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

"ஆலம் இண்டாவில், வடிகால் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிரீன் ஹில்ஸில், பெரிய வடிகால் ஒன்றை அமைக்க உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஐஆர் இஷாம் ஹாஷிம் ஒப்புதல் அளித்துள்ளார் என பிரகாஷ் தெரிவித்தார்.

"இவை அனைத்தும், அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தின் பாதிப்புகளை இனி குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கான முயற்சியாகும்" என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.